Vinayagar Agaval by Ovvaiyaar

சீதக்களப செந்தாமரைப்பூம் 
பாதச் சிலம்பு பல இசைபாட 
பொண்ணுரை ஞானும்பூந்துகிலாடையும் 
வன்னமருங்கில் வளர்ந்தழகெறிப்பப் 
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் 
வேழமுகமும் விளங்குசிந் தூரமும் 
அஞ்சுகரமும் அங்குசாபாசமும் 
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும் 
நான்ற வாயும் நாலிறு புயமும் 
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும் 
திரண்ட முப்புரிநூல் திகழொளிமார்பும் 
சொற்பதங் கடந்த தூரிய மெஞ்ஞான 
அற்புதம் நின்ற கற்பகக் களிறே 
முப்பழம் நுகரு மூஹிகக் களிறே 
இப்பொழுதென்னை ஆட்கொள வேண்டித் 
தாயாயெனக்குத் தானெழுந்தருளி 
மாயாப்பிறவி மயக்கம் அறுத்துத் 
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய் 
பொருந்தவே வந்தென் உளந்தனிற்புகுந்து 
குருவடி வாகிக் குவலயந் தன்னில் 
திருவடி வைத்துத் திரம் இது பொருளென 
வாடாவகை தான் மகிழ்ந்தெனக் கருளிக் 
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே 
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் 
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி 
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் 
இன்புற கருணையி லினிதெனக்கருளிக் 
கருவிக ளடுங்குங் கருத்தினை அறிவித்து 
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து 
தலமொரு நான்குந் தந்தெனக்கருளிஸ் 
மலமொரு நான்குந் தந்தெனக்கருளி 
மலமொரு மூன்றின் மயக்கமறுத்தே 
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் 
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி 
ஆரா தாரத் தங்குச நிலையும் 
பேறா நிறுத்திப்பேச்சுரை அறுத்தே 
இடையிங் கலையில் எழுத்தறிவித்துக் 
கடையிற் கழுமுனைக் கபாலமுங் காட்டி 
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் 
நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்திக் 
குண்டலி யதனிற்கூடிய அசைபை 
விண்டெழுமந்திரம் வெளிப்பட உரைத்து 
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் 
காலாலெழுப்புங் கருத்தறிவித்தே 
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 
குமுத சகாயன் குணத்தையுங் கூறி 
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் 
உடற் சக்கரத்தின் உறுப்பையுங் காட்டி 
சண்முகதூலமுஞ்சதுர் முகசூட்சமும் 
என் முகமாக இனிதெனக் கருளிப் 
புரியட்ட காயம் புலப்பட எனக்குத் 
தெரிஎட்டு நிலையுந் தெரிசனக் கருளிப் 
புரியட்ட காயம் புலப்பட எனக்குத் 
தெரி எட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக் 
கருத்தினிற் கபால வாயில் காட்டி 
இருத்தி முத்தி இனிதெனக் கருளி 
என்னை அறிவித் தெனக்கருள் செய்து 
முன்னை அறிவித்தெனக்கருள் செய்து 
முன்னை வினையின் முதலைக்களைந்து 
வாக்கு மனமுமில்லா மனோலயந் 
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து 
இருள் வெளியிரண்டிற் கொன்றிடமென்ன 
அருள் தரும் ஆனந்தத்தழுத்தியென் செவியில் 
எல்லையில்லா ஆனந்தம் அளித்து 
அல்லல் களைந்தே அருள் வழிகாட்டிச் 
சத்தத்தினுள்ளே சதாசிவங் காட்டி 
சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி 
அணுவிற் கணுவா யாப்பாலுக் கப்பாலாய்க் 
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி 
வேதமும் நீறும் விளக்க நிறுத்திக் 
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி 
அஞ்சக் கருத்தினரும் பொருள் தன்னை 
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத் 
தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட 
வித்தக விநாயகர் விரைகழல் சரணே 
சரணே சரணே

Comments